எதிர்க்கட்சி தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தில் இணையத் தயாராகி வருகிறார்கள் என்ற செய்தியை அரசாங்க சார்ந்த குழுக்கள் உருவாக்கி சமூகமயமாக்கியுள்ளன.
இதனை முற்றாக நிராகரிப்பதுடன், வன்மையாகக் கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் எதிர்க்கட்சியினர் இணையவுள்ளதாக பரவும் செய்திகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவரினால் ஞாயிற்றுக்கிழமை (16) வெளியிடப்பட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ராஜபக்ச அரசாங்கத்தின் நீட்சியாக இருக்கும் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தை விடவும் மோசமான பாதாளத்திற்கு எமது நாட்டைத் தள்ளுவதாக ஆரம்பம் முதலே எச்சரிக்கின்றோம். விரைவில் இந்த அரசாங்கத்தின் தோல்வியடைந்த வேலைத்திட்டம் அப்பட்டமாக வெளிப்படும்.
மொட்டுக் கட்சியின் நிழல் அரசாங்கமாக மாறிவரும் இந்த அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தி குறித்து போலியான செய்திகளை பரப்பி தனது தோல்வியான நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.
முதலாளித்துவ கும்பல்கள் மற்றும் பிற்போக்கு சக்திகளின் ஒரே சவால் எமது ஐக்கிய மக்கள் சக்தியாகும். அந்த கும்பல் ஒன்றுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியை சேதப்படுத்துவதற்கு எந்த விலையையும் கொடுக்க இருமுறை யோசிப்பதில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு குழு அரசாங்கத்தில் இணையப்போவதாக ஆரம்பத்தில் போலியான செய்திகளை வெளியிட்ட கும்பல் பிரதமர் பதவிக்காக எதிர்க்கட்சி அரசாங்கத்துடன் இணையும் என்பதை தங்களின் சமீபத்திய உத்தியாகப் பயன்படுத்துகின்றனர்.
இது ஒரு அப்பட்டமான பொய் என்பதுடன் ஆதாரமற்ற செய்திமாகும். இந்த கும்பலுக்கும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தீர்க்கமான பிளவு கோடு என்னவென்றால் நாங்கள் மக்கள் சக்தி மற்றும் வெளிப்படைதன்மையை நம்பும் அதே வேளையில் அவர்கள் டீல் மற்றும் மறைமுக தன்மையை என்பதை நம்புகிறார்கள்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான விதியிலிருந்து நமது நாட்டை ஒரு தேர்தலால் காப்பாற்ற முடியாது. இந்நாட்டில் இயங்கும் நாகரீக ஊடகங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்காக தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்வதை வெளிப்படுத்திய ஒரு சில கைக்கூலி ஊடகங்களுக்கு இது வலியுறுத்தப்பட வேண்டும்.
அவர்களுக்குக் கொடுக்கப்படும் விலைக்காக எந்தவொரு கட்டுக்கதையையும் சமூகமயமாக்குவதற்குப் பதிலாக அவர்கள் ஊடகங்களை புத்திசாலித்தனமாகவும் நெறி முறையாகவும் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.
மக்களால் உண்மையை மாற்ற முடியாது. ஆனால் உண்மையால் மக்களை மாற்ற முடியும்.நாட்டின் அப்பாவி மற்றும் ஆதரவற்ற மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சி அடையச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக வெறுப்பும்.
பேரம் பேசுவதும் சதிகள் மற்றும் உல்லாசப் பேரரசர்களின் அரசியலை மட்டும் முன்னெடுப்பது தன்னிச்சையானது. இதற்கு கடுமையான அதிருப்தியை வெளியிடுவ துடன் துரதிஷ்டமான அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிக்க விரும்புகிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.