Saturday, May 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம் | சஜித்

April 9, 2022
in News, Sri Lanka News
0
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.

மக்கள் ஆணைக்குழு அரசாங்கம் செவிமடுக்கவில்லை என்றால் அரசியல் அமைப்பிற்கு அமைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நேரிடும்.

அதனை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான யோசனையில் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

அரசாங்கத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றம்  8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் கூறுகையில்,

இன்றைய நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க ஒரு சில அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது, அதேபோல் அரசியல் மீள் கட்டமைப்பொன்றை செய்ய வேண்டியுள்ளது, அத்துடன் அரசியல் அமைப்பு திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது.

குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கு  இடையிலான அதிகார பகிர்வை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறான அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வேலைத்திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.

இப்போதுள்ள நிறைவேற்று அதிகாரத்துடனும், ஜனாதிபதியுடனும், 20 ஆம் திருத்தத்துடனும் வேறு மாற்று அரசாங்கம் ஒன்றினை சிந்தித்துப்பார்க்கவே முடியாது.

ராஜபக்ஷ குடும்பத்தை நீக்கிவிட்டு முன்னோக்கிய பயணம் குறித்து சிந்திப்பதென்றால் அது குறித்து எம்மால் சிந்தித்துப்பார்க்க முடியும்.

இன்று நாடும் மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதிக்கு இரங்கி போராடிக்கொண்டுள்ளனர்.

இந்த ஜனாதிபதியை நீக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். கள்ளர்களுடன் எவ்வாறு ஆட்சியை நடத்துவது.

இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை என்றால் கொள்கை அடிப்படையில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோம். பொறுப்புகளில் இருந்து தப்பித்து செல்லமாட்டோம்.

ஆனால் ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும், அதற்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.

மக்கள் ஆணைக்குழு அரசாங்கம் செவிமடுக்கவில்லை என்றால் அரசியல் அமைப்பிற்கு அமைய அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நேரிடும். அதனை கொண்டுவருவோம்.

அதற்கு 225 பேரின் ஆதரவையும் வழங்குங்கள். இதுவே மக்களுக்காக நீங்கள் செய்யும் நன்றிக்கடன் என்றார்.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான நேற்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் 18 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருந்ததுடன், ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்தையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி ஆளுங்கட்சியின் சுயாதீன உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவும், ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளவும் முயற்சிகளை எடுப்போம் என தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் அதுகுறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ எம்.பி கேசரிக்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

நாடு பாதுகாப்பாகவே இருக்கின்றது! | இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

Next Post

மின்வெட்டு தொடர்பான பொது பயன்பாடுகள் ஆணைக் குழுவின் மனு தள்ளுபடி

Next Post
நாளை முதல் இருளில் மூழ்குமா இலங்கை!!

மின்வெட்டு தொடர்பான பொது பயன்பாடுகள் ஆணைக் குழுவின் மனு தள்ளுபடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! போதைவஸ்து பாவித்ததன் காரணமா?

May 10, 2025
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

May 10, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி

May 10, 2025

Recent News

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! போதைவஸ்து பாவித்ததன் காரணமா?

May 10, 2025
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

May 10, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி

May 10, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures