Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமைச்சுக்களின் பணியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றி செயலமர்வு

August 13, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமைச்சுக்களின் பணியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றி செயலமர்வு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும்  செயற்திறனான சேவையாக மாற்றுவதற்காக, சகல அமைச்சுக்களிலும் பணியாற்றும்  பணியாளர்களுக்காக   செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த விசேட செயலமர்வுத் தொடர் ஆகஸ்ட் 15, 16 மற்றும் 23 ஆகிய திகதிகளில் அலரி மாளிகையில் நடைபெற உள்ளது. 

‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த செயலமர்வுத் தொடர், அரசாங்கத்தின் முதன்மையான திட்டமான அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான ஆரம்ப அணுகுமுறையாக அதிகாரிகளை தயார்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அரச சேவையில் சாதகமான அணுகலை ஏற்படுத்தும் நோக்குடன் நடைபெறுகிறது. 

இதன் முதல் திட்டம் அண்மையில்  ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்காகவும், இரண்டாவது  திட்டம்  கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்காகவும், மூன்றாவது திட்டம் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்காகவும் நடைபெற்றது.

ஏனைய அனைத்து அமைச்சுக்களின்  அதிகாரிகளுக்காகவும் எஞ்சிய செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின்  சிரேஸ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA)  நிறைவேற்றுப் பணிப்பாளர்  சஞ்சய கருணாசேன, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA)  பணிப்பாளர் சபை  உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும்  சம்சா அபேசிங்க ஆகியோர் வளவாளர்களாக  இணைவர்.

Previous Post

கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர், இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை

Next Post

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

Next Post
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - இராமலிங்கம் சந்திரசேகர்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures