Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமைச்சர் வைத்தியர் நளிந்த தலைமையில் விசேட நடைபவணி

December 28, 2024
in News, Sri Lanka News
0
அமைச்சர் வைத்தியர் நளிந்த தலைமையில் விசேட நடைபவணி

அன்டிபயோட்டிக் (Antibiotic) என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி “அனைவரும் ஒன்றிணைவோம் – நுண்ணுயிர் எதிர்ப்பிகளை காப்போம்” என்னும் தொனிப்பொருளில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட நடைபவணி இடம்பெற்றிருந்தது.

அன்டிபயோட்டிக் (Antibiotic ) என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவையற்ற பாவனைத் தொடர்பில் பொதுமக்களை தெழிவூட்டுவதற்காக சுகாதார அமைச்சின் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான மையத்தால் மேற்படி நடைபவணி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்ற இந்த நடைபவணியில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க, பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, உள்நாட்டு கலைஞர்கள், தன்னார்வலர்கள், மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துக் கொண்டிருந்தனர். நேற்று காலை 10.00 மணியளவில் சுதந்திர சதுக்க வளாகத்துக்கருகில் ஆரம்பமாகிய பேரணி, சுகாதார அமைச்சை சென்றடைந்திருந்தது.

அன்டிபயோட்டிக் (Antibiotic ) என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தேவையற்ற மற்றும் தவறான பயன்பாடு மனித உடலுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கக் கூடியது. இந்த மருந்துகளை தவறாக பயன்படுத்தும் போது நுண்ணுயிர்களின் எதிர்ப்பை வளர்த்து, மருந்துகளை பயனற்றதாக்கி, உடலின் ஆரோக்கியத்தை சாலான நிலைமைக்கு ஆளாக்கி விடுகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அனாவசியமான பாவனை தேசிய மற்றும் சர்வதேச பேரழிவாக உருவெடுத்துள்ளது. மனிதர்கள் எதிர்நோக்கும் பிரதான பத்து உடல் நலப் பிரச்சினைகளில் ஒன்றாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2019 ஆண்டு மாத்திரம் 2300 பேர் உயிரிழந்துள்ளனர். நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிகம் பயன்படுத்துகின்ற நாடு என்ற வகையில், இதற்கு உடனடித் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் காலங்களில் பெரும் அனர்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பாவனையை கட்டுப்படுத்த மருந்துகளை இறக்குமதி செய்வதிலிருந்து பரிந்துரைப்பது வரையிலான செயல்முறையை நெறிப்படுத்துவதுடன் விஞ்ஞான ரீதியில் அவசியமான புதிய சட்டங்களை அமுல்படுத்தி அதற்கான பொறிமுறையை வலுப்படுத்தவும், மக்களை அறிவூட்டவும் விரைவில் முறையான திட்டமொன்று தயாரிக்கப்படும் என்றார்.

Previous Post

72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி தனியார் துறையால் இறக்குமதி | சீவலி அருக்கொட

Next Post

தமிழர் அரசியல் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக்கூட 13ஆம் திருத்தம் இல்லை ; இந்தியா அமைதிகாத்தால் மகிழ்ச்சியடைவேன் | கஜேந்திரகுமார்

Next Post
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

தமிழர் அரசியல் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக்கூட 13ஆம் திருத்தம் இல்லை ; இந்தியா அமைதிகாத்தால் மகிழ்ச்சியடைவேன் | கஜேந்திரகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures