அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டானது தம் மீது சுமத்தப்படுமானால் தான் பதவிவிலகியிருப்பேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியிலும் திருடர்கள் இருப்பதாக தான் கூறியபோது தன்னை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு சிலர் தெரிவித்ததாகவும்,தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் யார் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள் என பார்க்கலாம் என்றும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் இவ்வாறானதொரு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று காணப்படவில்லை என்றும்,தற்போதைய அரசானது சுயாதீனமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கீழ் எந்தவொரு நபர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனடிப்படையில் யார் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள் என தான் பார்த்துக்கொண்டிருப்பதாவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிணைமுறி விநியோகம் தொடர்பில் ஆணைக்குழுவில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.