Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமைச்சர்களுக்கு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

November 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் போது குறித்த பாதுகாப்பு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அமைச்சர்களின் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருளையே பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பிற்கும் வழங்குமாறு கோருவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர்களுக்கு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு | Sri Lanka Fuel Price Today

பொலிஸ் திணைக்களம் இதுவரையில் ஏற்க வேண்டிய பாரிய எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், திறைசேரி அதிகாரிகளுக்கும் உரிய தீர்மானம் குறித்து அறிவிக்க வேண்டியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் ஆளுநர்கள் மற்றும் பல ஓய்வுபெற்ற அரச உயர் மட்ட அதிகாரிகள் இன்னும் பொலிஸ் பாதுகாப்பைப் பயன்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கும் பொலிஸாரால் எரிபொருளைச் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் 13 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 20 முன்னாள் ஆளுநர்கள், 6 முன்னாள் முதலமைச்சர்கள், 29 பௌத்த பிக்குகள் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. சுமார் 250 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அழைத்துச் சென்றால் அவர்களுக்குத் தேவையான விமானப் பயணச்சீட்டுகள் உட்பட அனைத்துச் செலவுகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சு ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதிபதிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நீதி அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் தொழுநோய்

Next Post

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் நினைவுப் பேருரை

Next Post
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் நினைவுப் பேருரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் நினைவுப் பேருரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures