Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க பார்லிமென்டிற்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி

January 7, 2018
in News, Politics, World
0

அமெரிக்க பார்லிமென்டிற்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர்(53) என்ற பெண், மேரிலாண்ட்டிலிருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது அவர், ஜனநாயக கட்சி சார்பில் மேரிலாண்ட் மாகாண கீழ்சபை உறுப்பினராக உள்ளார். கடந்த 2010ம் வருடம் முதல் அந்த பதவியில் உள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மில்லர் கூறியதாவது: இங்கு வந்து குடியேறிய எனக்கு, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இதனை நான் முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். அனைத்து குடிமக்களுக்கும் வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே உள்ளன என்பதை உறுதிபடுத்த விரும்புகிறேன். அமெரிக்க பார்லிமென்டிற்கு, தற்போது அனுபவம் மற்றும் முற்போக்கான உறுப்பினர்கள்தேவை. நாட்டிற்கும், மக்களுக்கும் பயன்படும் வகையிலான கொள்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அருணா மில்லர் கூறினார்.

அருணா மில்லர் 7 வயதாக இருக்கும் போது, தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கு சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேரிலாண்டு பகுதியில் மில்லரை தவிர்த்து அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கனை சேர்ந்த நாடியா ஹஸ்மி உள்ளிட்ட 4 பேர் போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர்.

Previous Post

கிம் ஜோங்குடன் பேச தயார்: டிரம்ப்

Next Post

70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினர் இவரா?

Next Post

70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினர் இவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures