அமெரிக்காவில் சில விமானப் பயணிகளின் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக மிகவும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணிக்கும் நபர்கள், வினோதமாக நடந்து கொள்பவர்கள், விமான நிலையத்தில் அடிக்கடி கழிவறைகளை பயன்படுத்தும் நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தீவிரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்று கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்காக தனி ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களையும், அவர்கள் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றும் போலீசாருக்கு இணையாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர்.
இதை பல ஆண்டுகளாக தாங்கள் செய்துவருவதாக, விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் நலன் கருதியே இத்தகைய நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.

