சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மும்பை ஐகோர்ட்டில் இன்று(ஜன.,23) விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு குஜராத்தில் சோராபுதீன் ஷேக் அவரது மனைவி ஆகியோர் போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர் உள்பட 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். சி.பி..ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கினை நீதிபதி ஜே.டி. உத்பட் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் , மும்பை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.