Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அநுர கட்சி அமைச்சர்களுக்கு அழைப்பாணை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

September 12, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணி அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் பல தரப்பினரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாட்டின் காணிகளை நிர்வகிக்க தேசிய திட்டத்தை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த தரப்பினரை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல்கள் 

சுற்றுச்சூழல் நீதி மையத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தம்மிக்க கணேபோல மற்றும் ஆதித்ய படபெந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அநுர கட்சி அமைச்சர்களுக்கு அழைப்பாணை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு! | Court Notices To Govt Parties Including Ministers

மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீந்திரன் தாபரே, நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்து, நாட்டில் காணி மேலாண்மைக்கான தேசிய திட்டம் இல்லாததால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய நடவடிக்கைகள், காடுகள், சதுப்பு நிலங்கள், குடியிருப்புகள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய காணிகள் மற்றும் அவற்றின் எல்லைகள் முறையாக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படாததால், நாட்டில் பல சுற்றுச்சூழல் மற்றும் பிற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அழைப்பாணை 

இந்த நிலையில், நாட்டில் உள்ள நிலங்களிலிருந்து முறையான நன்மைகளைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுர கட்சி அமைச்சர்களுக்கு அழைப்பாணை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு! | Court Notices To Govt Parties Including Ministers

ஒரு தீவு நாடான இலங்கை, தனக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவது அவசியம் என்றும், முறையான காணி மேலாண்மைத் திட்டம் இல்லாததால், முறையான உற்பத்தி இலக்குகளை அடைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை கருத்தில் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இது தொடர்பாக பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள காணி அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் ஆகியோரை நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் தங்கள் முன்மொழிவுகளை முன்வைக்க உத்தரவிட்டு, அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

Previous Post

நாயைப்போல சுட்டு வீதியில் வீசப்பட்ட ஊடகவியலாளர்! கேட்டு மகிழ்ந்த மகிந்த

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures