Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிர்ச்சி கொடுத்த புலனாய்வு அறிக்கைகள்! கதிகலங்கிய நிலையில் மைத்திரி

February 5, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையாக புலனாய்வு பிரிவு அறிக்கைகள் இந்த நாட்களில் வெளியாகி கொண்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, பல்வேறு குழுக்களும், அரசியல் கட்சிகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றியீட்டும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன.

பல கருத்துக்கணிப்புகளில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மோசமான பின்னடைவு ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால், உள்ளூராட்சி சபைகளிலும், ஐக்கிய தேசிய கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கூட்டு ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில், ஐக்கிய தேசியக் கட்சி 225 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 40 ற்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் கட்சிகள், 50ற்கும் அதிகமான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும்.ஜேவிபி ஒரு சபையில் கூட வெற்றி பெறாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் 7இற்கும் குறைந்த சபைகளையே கைப்பற்ற முடியும் என்றும் அந்த புலனாய்வு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, முப்படையினர் பெரும்பாலும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே வாக்களித்துள்ளனர் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

பொலிஸாரின் தபால் வாக்குகள் பெரும்பாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கே அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கதிகலங்கி போயுள்ளதாக அரச தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Previous Post

ம.வி.மு தோ்தல் காரியாலயம் தீ வைப்பு

Next Post

ஒரே தேச உணர்வுடன் ஒரே கொடியின் கீழ் அணிதிரள்வோம் – மட்டக்களப்பு அரச அதிபர்

Next Post

ஒரே தேச உணர்வுடன் ஒரே கொடியின் கீழ் அணிதிரள்வோம் - மட்டக்களப்பு அரச அதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures