Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை | எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக ஆலோசனை

June 16, 2022
in News, World, இந்தியா
0
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை | எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக ஆலோசனை

ஒற்றைத் தலைமை என்கிற கோரிக்கை மீண்டும் அதிமுகவில் எழுந்து நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவர்களுடைய ஆதரவாளர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வரும் ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடுகிறது, இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்கிற கோரிக்கையை கட்சித் தலைமையிடம் முன்வைத்துள்ளனர்,  இதனால் மீண்டும் ஒற்றை தலைமை என்கிற சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அருகேயும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது,

சமீப காலமாக அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட வில்லை என ஒரு கருத்து எழுந்துள்ள நிலையில் அது கட்சிக்குள்ளும்எழுந்த ஒரு காரணத்தினால் இந்த ஒற்றைத் தலைமை என்கிற கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை கொண்டு வரவும் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஒருவேளை மீண்டும் ஒற்றை தலைமை கூட வந்தால் அதை யார் பொறுப்பேற்பது என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது பெரும்பாலானோர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்கிற கருத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்கள் அவரை சந்தித்து ஆலோனை நடத்தி வருகின்றனர்.

இதே போல கட்சி நிறைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Previous Post

சுருள் சிரை எனப்படும் நரம்பியல் பாதிப்பை களைவதற்கான நவீன லேசர் சிகிச்சை

Next Post

5 வயது மகனை களனி கங்கையில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

Next Post
5 வயது மகனை களனி கங்கையில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

5 வயது மகனை களனி கங்கையில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures