Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிகமானவிலையில் கோழி இறைச்சி விற்பனை- 8 வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை

June 22, 2020
in News, Politics, World
0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமானவிலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த எட்டு வியாபாரிகளுக்கு எதிராக இன்று திங்கள்கிழமை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிழக்குமாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமானஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடை போன்ற பகுதிகளில் அரசாங்கத்தின்கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகள்விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் நுகர்வோர் அதிகார சபையிக்கு கிடைக்கப்பப் பெற்றமுறைப்பாட்டிற்கு அமைவாக நடைபெற்ற விசாரணைகளின் போதே எட்டு வியாபாரிகளுக்கு எதிராகவாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின்உதவிப்பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத்தெரிவித்தார்.

தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி ஒரு கிலோ 500.00 க்கு விற்கப்படவேண்டும் என்று நிர்ணய விலை உள்ள நிலையில் குறித்த வர்த்தகர்கள் 650.00 க்கு விற்பனைசெய்ததாகவும் இதனை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளை கடமையை செய்வதற்கு இடைஞ்சலாக வார்த்தைப்பிரயோகங்கள் செய்ததாகவும் இவ்வாறு கூடிய விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராகவாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும்வழக்ககு எதிர்வரும் 25.06.2020 வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பொருட்கள் கொள்வனவில் தெளிவாக இருக்கவேண்டும் என்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் எனதுதொலைபேசி இலக்கமான 077011096 என்ற இலக்கத்துடன்தொடர்பு கொள்ளுமாறும் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் மேலும் தெரிவித்தார்.

Previous Post

கருணா குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

Next Post

கருணாவின் கருத்து: ஜனாதிபதி கோட்டா, பிரதமர் மஹிந்தவின் கருத்து என்ன

Next Post

கருணாவின் கருத்து: ஜனாதிபதி கோட்டா, பிரதமர் மஹிந்தவின் கருத்து என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures