Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வடக்கு – கிழக்கு தழுவிய பாரிய போராட்டம்!

April 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வடக்கு – கிழக்கு தழுவிய பாரிய போராட்டம்!

தமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கு – கிழக்கு தழுவிய போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு – கிழக்கு தழுவிய போராட்டம் 

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய பாரிய போராட்டம்! | North Eastern Protest On April 22

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் கடந்த முதலாம் திகதி ஏழு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் 22 இற்கும் மேற்பட்ட மத, சமூக மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றிருந்தது.

அந்த கூட்டத்தில், தமிழ் மக்களின் தொன்மையையும் தேசியத்தையும் சிதைக்கும் வகையில் கலாசார பண்பாட்டு மற்றும் சமூக விழுமியங்களை சிதைத்து இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டத்தை வடக்கு – கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நாளில் முன்னெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய பாரிய போராட்டம்! | North Eastern Protest On April 22

அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் இவ்வேளையில் அதனுடைய கடுமையான எதிர் விளைவுகளைக் கவனத்தில்கொண்டு அந்தச் சட்ட வரைவை எதிர்த்தும் அதை நிறைவேறாமல் தடுப்பதற்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களினுடைய பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் நடத்தி ஒன்றிணைந்த எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக போராட்டம் தொடர்பான ஏற்பாட்டு குழுவினர் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

Previous Post

சூடானில் வன்முறை! பரபரப்பான சூழல்

Next Post

பண்ணை அம்மன் சிலையை அகற்றுவோம் | பொலிஸார் எச்சரிக்கை

Next Post
பண்ணை அம்மன் சிலையை அகற்றுவோம் | பொலிஸார் எச்சரிக்கை

பண்ணை அம்மன் சிலையை அகற்றுவோம் | பொலிஸார் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures