Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரிய தகவல்

November 3, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் மாகாண சபை தேர்தலே இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் சிலர் பாராளுமன்றத் தேர்தலுக்கு அவசரப்படுகின்றனர். அதற்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜனநாயக ரீதியில் மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதே முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவுற்று சகல மாகாண சபைகளும் ஆளுநர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலுக்குச் செல்ல தாம் தயாராகி வருகின்றோம்.

ஆனால், சில கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இது ஆரோக்கியமானதாகப்படவில்லை. மாகாண சபைகளுக்கான தேர்தலை காலம் கடத்துவது ஜனநாயக முறைமைக்கு விரோதமானதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

மாகாண சபைகளின் அதிகாரம் தனிநபர்களிடம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல எனவும் ஆணைக்குழுத் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

மகளிர் அணி கூட்டத்துக்கு இடை நடுவில் தடை

Next Post

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று!

Next Post

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures