ஹட்டனில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டில் இருந்து ஒன்பது கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தற்போது யெமனில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
வீட்டின் களஞ்சிய அறையில் இருந்து இந்த கத்திகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஹட்டன் மாவட்ட நீதவான் ஜொக்சி முன்னிலையில் முற்படத்தப்பட்ட பின்னர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

