‘தொடரி’ வெளியீட்டில் மீண்டும் மாற்றம்

‘தொடரி’ வெளியீட்டில் மீண்டும் மாற்றம்

 

 தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தொடரி’ வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஒரு ரயில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால் அதன் கிராபிக்ஸை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அனைத்துப் பணிகளும் முடிந்தவுடன், விரைவில் படத்தை தணிக்கை செய்து விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதலில் ஜூலை மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், ‘கபாலி’ வெளியீட்டால் தற்போது சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியிட நினைத்தார்கள்.

ஆனால் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்பதால் தற்போது ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிடலாமா அல்லது செப்டம்பர் வெளியீட்டுக்கு மாற்றலாமா என படக்குழு ஆலோசனையில் இறங்கியிருக்கிறது. மாற்றம் தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி வெளியீட்டு தேதியை முடிவு செய்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

‘தொடரி’ வெளியீட்டைத் தொடர்ந்து ‘கொடி’ படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News