இலங்கையில் இயங்கும் சமய அமைப்புக்களுக்கு நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனம், இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக அரசியல் வாதிகளும், சமூக ஊடகங்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.
இந்நிலையல் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தொடர்பாளர் சாரா ராஃபா ஜலாதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் எய்ட ஸ்ரீலங்கா நிறுவனம் சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாகவும், அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களைத் திட்டவட்டமாக மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

