கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் இருவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் இஸ்மாயில் மற்றும் அலியார் மொஹமட் நியாஸ் ஆகிய இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமல் பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இருவரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என்பதால் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.
அதன்படி சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

