Thursday, February 2, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Politics

இலங்கையில் அரங்கேற்றப்படும் மறைமுக சூழ்ச்சி! பலியாகப் போவது மைத்திரியா? மஹிந்தவா? ரணிலா?

May 29, 2016
in Politics
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் அரங்கேற்றப்படும் மறைமுக சூழ்ச்சி! பலியாகப் போவது மைத்திரியா? மஹிந்தவா? ரணிலா?

இலங்கை அரசியல் மட்டத்தில் தற்போது பல்வேறு கோணங்களில் சூழ்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதான கட்சிகளின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தை உடைந்து தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியின் கீழ் அரசாங்கத்தை அமைக்க திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

இதனொரு அங்கமாக அண்மையில் அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ்.பீ.திஸாநாயக்க ஆகியோரின் வெளியிட்ட கருத்து அமைந்துள்ளது.

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யோசனையை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கமைய, ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாதென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்படவில்லை என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இவர்களின் கருத்து பரிமாற்றலின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி ஒன்று செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்கி மாநில ஒற்றுமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வது அவசியம் என கூறப்பட்டது. இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முயற்சிப்பதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது செயற்படுத்தப்படாத போதிலும், 13ஆம் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு சொந்தமானதாக உள்ளன.

ஜனாதிபதி முறையை தொடர்ந்து நடத்தி செல்வதென்றால் பொலிஸ் அதிகாரம் இன்றி காணி அதிகாரத்தை மாத்திரம் வழங்குவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உபாயத்தின் மூலம் பல நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்பார்த்துள்ளதாக தெரிய வருகிறது.

பிளவடைந்துள்ள சுதந்திர கட்சியை இதன் ஊடாக இணைத்து கொள்வது இதன் பிரதான நோக்கமாகும். ஐக்கிய தேசிய கட்சியில் பிரச்சினையை ஏற்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதே இதன் இரண்டாவது நோக்கமாகும்.

காணி அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக சிறுபான்மையினரை இணைத்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது மூன்றாவது நோக்காகும்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பை ஒன்றை உருவாக்குவதற்காக பெறப்பட்ட மக்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் வைத்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கமைய பொலிஸ் அதிகாரம் இன்றி காணி அதிகாரம் உள்ளடக்கப்பட்டு, மாகாண சபை அதிகாரங்களை விரிவுபடுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானிப்பதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக தங்கள் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தங்கள் குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தாக ஒப்பந்தத்திற்கமைய மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற ஆயத்தமாகுவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இணைப்பதற்கு தடையாக உள்ள மஹிந்த தரப்பை நீக்கிவிட்டு முன்னோக்கி செல்வதற்கு தற்போது வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணக்கப்பாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous Post

புதுக்குடியிருப்பில் மாபெரும் முத்தமிழ் விழா! திரைப்பட நடிகர் நாசர் பங்கேற்பு

Next Post

இராணுவத்தினரை தடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு!

Next Post
Easy24News

இராணுவத்தினரை தடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா

‘தளபதி 67’ அப்டேட்

February 1, 2023
13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் – ஐநா அமர்வில் இந்தியா

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் – ஐநா அமர்வில் இந்தியா

February 1, 2023
பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் – நுலன்ட்

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் – நுலன்ட்

February 1, 2023
அகால மரணமடைந்த ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

அகால மரணமடைந்த ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

February 1, 2023

Recent News

தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா

‘தளபதி 67’ அப்டேட்

February 1, 2023
13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் – ஐநா அமர்வில் இந்தியா

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் – ஐநா அமர்வில் இந்தியா

February 1, 2023
பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் – நுலன்ட்

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் – நுலன்ட்

February 1, 2023
அகால மரணமடைந்த ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

அகால மரணமடைந்த ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

February 1, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures