அதர்வாவின் அடுத்த அதிரடி இது தான்
பரதேசி படத்திற்கு பிறகு தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை அதர்வாநிரூபித்துவிட்டார். இதைத் தொடர்ந்து ஈட்டி படத்தின் மூலம் வெற்றிப்பட நாயகனாகவும் பெயர் எடுத்துவிட்டார்.
இவர் அடுத்து செம போத ஆகாத என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை முடித்த கையோடு டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதவுள்ளார், இந்த படம் த்ரில்லர் கதையம்சம் கொண்டதாம். இந்த படத்தை த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை தயாரித்த Cameo Films தயாரிக்கவுள்ளது.