நிவின்பாலி நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் மலையாளம் மற்றும் இந்தியில் வெளியான படம் மூத்தோன். நடிகை கீது மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
கேரளா மற்றும் மும்பை பின்னணியில் அமைந்திருந்த இந்த படத்தின் கதைக்களமும், வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிவின்பாலியின் கதாபாத்திரமும், படத்தின் வெற்றிக்கு ஏற்ற படம் அல்ல என்பதையும், அதேசமயம் விருதுகள் பெறுவதற்கு தகுதியான படம் என்றும் நிரூபித்தது.
மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவின்பாலி.
கடந்தாண்டு டொரண்டோ திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படத்திற்கான விருது பெற்ற இந்த படம், தற்போது பாரிசில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியை இந்த விழாவில் கலந்து கொண்ட நிவின்பாலியும் இயக்குனர் கீது மோகன்தாஸும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

