24 எஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் சிவகார்த்திகேயனின் 14வது படத்தின் தலைப்பு இன்று(பிப்., 3) மாலை அறிவிக்கப்பட உள்ளது.
இந்தப் படத் தயாரிப்பில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. ‘ஹீரோ’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் கை கோர்க்கிறது இந்நிறுவனம்.
சில பிரச்சினைகள் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாத காலம் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த வாரம்தான் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
சயின்ஸ் பிக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

