முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக மும்பையில் நடந்த தர்பார் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினி, ‘தனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்க பிடிக்காது’ என்று கூறினார். மேலும், தாங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ‘தனக்கு திருநங்கையாக நடிக்க ஆசை’ என்றார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தர்பார் படத்தில் இடம்பெறும் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரம், மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும் என ரஜினி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

