ஜெமினி படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை கிரண். அதன் பின், அவர் வின்னர், அன்பே சிவம், வில்லன், திருமலை உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.
38 வயதான நடிகை கிரண், தொடர்ந்து நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்மா வேடம் கொடுப்பதற்கு பல இயக்குநர்கள் முன் வந்தும் அதை ஏற்க மறுத்து விட்டார். எப்படியும் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போதுமா… இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்கிற அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையில், ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடாமல், நடனம் போல ஆக்ஷன் மட்டும் கொடுத்து, அதை வீடியோ பதிவாக்கி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது வைரலாகி இருக்கிறது.

