1997ம் ஆண்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத், அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கமல்ஹாசன் தொடங்கிய பிரம்மாண்ட சரித்திர படம் மருதநாயகம். பாதிக்கு மேல் வளர்ந்த நிலையில் நிதி பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டது.
தனது கனவுப்படமான ‛மருதநாயகம்’ படத்தை எப்படியாவது முடித்து, திரையிட்டு விட வேண்டும் என கமலும் பல ஆண்டுகளாக முயற்சித்தார். ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படம் முடங்கி கிடக்கிறது.
இந்நிலையில் ‛மருதநாயகம்’ எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு கமல் அளித்த ஒரு பேட்டியில், மருதநாயகம் படத்தை நிச்சயமாக திரையில் பார்ப்பீர்கள். ஆனால் அதில் கமல்ஹாசன் இல்லாமல் வேறு நடிகர் நடித்திருப்பார். இனி நான் கண்டு வைத்திருந்த கனவுகளை எல்லாம் நல்ல நடிகர்களை வைத்து நிறைவேற்றும் கம்பெனியாக ராஜ்கமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். என் அரசியல் பயணத்தை பாதிக்காத வகையிலான படங்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
கமலின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

