மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மட்டிப்பாடம் என்கிற படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் நடிகர் மணிகண்ட ஆச்சாரி. அதன்பிறகு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு, ஜாக்பாட்டாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பேட்ட படத்தில் விஜய் சேதுபதியை ரஜினி டீமிடம் சாதுர்யமாக சிக்கவைக்கும் வேலையை செய்திருப்பார் மணிகண்ட ஆச்சாரி. இந்தநிலையில் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துவரும் விஜய்சேதுபதி மாமனிதன் படத்தில், மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார் மணிகண்ட ஆச்சாரி. இந்த படத்தில் இவர்கள் இருவருமே ஆட்டோ ஓட்டுனர்களாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

