கீர்த்தி சுரேஷ் எப்போதுமே வித்தியாசமான நடிகை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிற நடிகைகளுக்கு மத்தியில் உச்சத்தில் இருக்கும்போதே தற்காலிக ஓய்வை அறிவித்து விட்டு ஓய்வில் இருக்கிற நடிகை அவர். நடிகையர் திலகம் படத்தில் தன்னை நிரூபித்து விட்டு, சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் என மாஸ் படங்களில் நடித்து விட்டு, தற்போது 2 மாத ஓய்வில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
போன் போட்டு எப்படி இருக்கீங்க என்றால் “புல் ரெஸ்ட்ல இருக்கேன். அப்பப்போ கவிதை எழுதிக்கிட்டிருக்கிறேன்” என்றார். ஒரு கவிதை சொல்ல முடியுமா என்றதற்கு அவர் சொன்ன கவிதை இது…
தமிழின் தாய் சுழி நான்
ஆம், நான் ஆ தான்.

