Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய்யை மட்டும் குறிவைப்பது ஏன்? – ரசிகர்கள் குமுறல்

July 7, 2018
in Cinema
0
விஜய்யை மட்டும் குறிவைப்பது ஏன்? – ரசிகர்கள் குமுறல்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு இடம் பெற்றிருந்தது. இதை பா.ம.க., கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் விஜய் புகைப்பிடிக்கும் போஸ்டரை உடனடியாக இணையதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக சுகாதாரதுரை நேற்று விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து சர்கார் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் டுவிட்டர் தளத்திலிருந்து சம்பந்தப்பட்ட அந்த போஸ்டர் மட்டும் உடனடியாக நீக்கப்பட்டது.

இந்த பிரச்னை இத்துடன் ஓயும் என்று பார்த்தால் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். ஏராளமான விஜய் ரசிகர்கள் தங்களின் டுவிட்டர் டிபி போட்டோவில் விஜய் புகைப்பிடிக்கும் சர்கார் போஸ்டரை வைத்துள்ளனர். இன்னும் சில ரசிகர்கள் அதை பிளக்ஸ், பேனராக வடிவமைத்து டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் ரசிகர் ஒருவர் கூறியதாவது : விஐபி., படத்தில் தனுஷ் புகைப்பிடித்தார், அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் சிம்பு புகைப்பிடித்தார். அருவி, அசுரவதம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான போஸ்டர்கள் அதுபோன்று வந்தன. ஆனால் அவர்கள் யாரையும் கேட்கவில்லை.

விஜய் படங்கள் மட்டும் தான் அவர்களின் கண்களுக்கு தெரிகிறதா. யாரை தொட்டால் விளம்பரம் வரும் என அவர்களுக்கு தெரியும். முன்பு ரஜினி தற்போது விஜய்.

சர்கார்-ல் சிகரெட் பிடிப்பதை சுட்டி காட்டியவர்கள், அவர் தூத்துக்குடி சென்று உதவியதை ஏன் சுட்டி காட்டவில்லை. விஜய்யை வைத்து விளம்பரம் தேடி கொள்வதே முக்கிய எண்ணம். பிரச்சனை சிகரெட் இல்லை விஜய்.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடும் தெம்பு விஜய்க்கு உண்டு. அரசியல் வலைகளும் சூழ்ச்சிகளும் அவரை ஒன்றும் செய்ய முடியாது.

சமூக வலைத்தளத்தில் இருந்து விஜய்யின் (புகை)ப்படத்தை நீக்க முடியும். ஆனால் சமூக மக்களின் மனதில் நீக்க முடியாத அளவிற்கு உச்சத்தில் இருக்கிறார்.

Previous Post

ஒய்.எஸ்.ஆராக மாறிய மம்முட்டி : இயக்குநர் புகழாரம்

Next Post

காணாமற்போன 7 மீனவர்களைத் தேடும் பணி

Next Post

காணாமற்போன 7 மீனவர்களைத் தேடும் பணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures