Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

சுனில் சேத்ரியின் 100-வது போட்டியில் கென்யாவை பந்தாடிய இந்தியா!

June 5, 2018
in Sports
0

ஆட்டத்தின் 92-வது நிமிடம். ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன. மாற்றுவீரராகக் களமிறங்கிய பல்வந்த் சிங்கிடமிருந்து பந்தைப் பெற்றதும், கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமெடுக்கின்றன சுனில் சேத்ரியின் கால்கள். பின்னால் மூன்று கென்ய டிஃபண்டர்கள், முன்னே கென்யாவின் கோல்கீப்பர், நடுவில் சேத்ரி. அதேவேகத்தில் கென்யாவின் கோல் பாக்ஸை நெருங்கியதும், கூலான ஒரு ‘சிப்’. பந்து கோல்கீப்பரின் தலைக்கு மேலே பறந்து போஸ்ட்டுக்குள் விழுகிறது.

கோல் விழுந்ததும், தனக்கு முன்னால் இருக்கும் பேரிகார்டைத் தாண்டி, கூடியிருக்கும் ரசிகர்கள் முன்னால் சென்று, இரு கைகளையும் நீட்டியவாறு நிற்கிறார் சேத்ரி. மும்பை மைதானமே, ”சேத்ரி… சேத்ரி…” என ஆர்ப்பரிக்கிறது. தன் 100-வது போட்டியில் விளையாடும் ஒரு வீரருக்கு இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்! ‘இஞ்சுரி டைம்’ என்று சொல்லப்படுகின்ற ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் விழும் கோல்கள் தான் ரசிகர்களின் உற்சாகத்தை உச்சகட்டத்துக்கு கொண்டு செல்லும். சேத்ரி அடித்த இரண்டாவது கோல், அப்படிப்பட்ட ஒரு கோல்தான். சேத்ரிக்காக கூடியிருந்த 9,000 ரசிகர்களுக்கும் இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்!

‘இன்டர்கான்டினென்டல் கப்’ தொடரில் விளையாடிவரும் இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில் கென்யாவை நேற்று சந்தித்தது. இந்திய கேப்டன் சுனில் செத்ரி இரண்டு கோல்களும், ஜேஜே லால்பெகுலா ஒரு கோலும் அடித்து அசத்த, 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது இந்திய அணி. ஆட்டத்தின் இறுதிவரை காத்திருந்த ரசிகர்களின் உற்சாக ஆரவாரங்கள், கொட்டித்தீர்த்த பேய்மழையையே ஓவர்டேக் செய்ய, இந்த ஆட்டத்தில், சூப்பராக வெற்றிவாகை சூடினர் நம் இந்தியப் புலிகள்.

ஆட்டத்தின் முதல்பாதி முழுவதுமே கனமழை பெய்தது. அதனால், மைதானம் முழுவதுமே மழைநீர் குளம்போல் நிரம்பியிருக்க, பந்தை வசப்படுத்த முடியாமல் இரு அணி வீரர்களும், மிகுந்த சிரமத்துடனே விளையாடினர். இருபுறமும் பந்து மாறி மாறி சென்று வந்தாலும், இந்தியாவைக் காட்டிலும், கென்யாவின் கையே சற்று ஓங்கி இருந்தது. முதல்பாதியில் கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஒருவழியாக மழை நின்றது; ஆட்டமும் சூடு பிடிக்கத் தொடங்கியது. கென்யாவின் அட்டாக்கை சமாளிக்க முடியாமல், தொடக்கத்தில் திணறியது இந்திய அணி. நல்ல வேளையாக, இந்திய டிஃபென்ஸின் `ஒன்மேன் ஆர்மி’யான சந்தேஷ் ஜிங்கன், களத்தில் சூறாவளியாகச் சுழன்று, கென்ய வீரர்களின் கோல் வாய்ப்புகளை எல்லாம் கிளியர் செய்துவிட்டார். கோல் அடிக்க, இந்திய வீரர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

Previous Post

கென்யாவைத் தோற்கடித்து ஃபைனலில் காலடியெடுத்துவைத்தது இந்தியா

Next Post

`மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதுக்கு ரூ.16,778 பரிசுத் தொகை!

Next Post

`மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதுக்கு ரூ.16,778 பரிசுத் தொகை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures