Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

50-0 மேவெதரின் சாதனையை முறியடிப்பாரா வான்ஹெங்

March 22, 2018
in Sports
0
50-0 மேவெதரின் சாதனையை முறியடிப்பாரா வான்ஹெங்

குத்துச்சண்டை வீரர் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம் எப்படி இருக்கும்? நல்ல உயரம், அச்சுறுத்தும் உடற்கட்டு; மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கும் கைகள். எதிராளியைத் தாக்கி அழிக்கும் ஆகிருதி கொண்ட ஓர் ஆறு அடி உயர விளையாட்டு வீரர்தானே நம் நினைவுக்கு வருவார்?

அது மட்டுமல்லாமல், குத்துச்சண்டை வீரரின் உயரமும் மிக முக்கியம். எதிராளியைத் தாக்கி அடிக்கும்போது, உங்களுடைய கைகள் எந்த அளவுக்கு நீண்டு தாக்க முடிகின்றதோ, அந்த அளவுக்குக் குத்துச்சண்டையில் நீங்கள் எளிதாக யுக்திகள் அமைத்து வெற்றி பெறவும் முடியும். ஆனால், பெரிதாக உயரமும் இல்லாமல், உடல் எடையும் இல்லாமல் ஒருவர் 49 முறை தொடர்ச்சியாகக் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

அதுதான் உண்மை. தாய்லாந்தைச் சேர்ந்த வான்ஹெங் மெனயாத்தினின் கதையைக் கேட்டால் இது உண்மையா அல்லது நம்மூர் சினிமாவா எனக் குழப்பம் வரும். ஒருவர் தொடர்ச்சியாக எத்தனை முறை வெல்லலாம்? ஐந்து முறை? பத்து முறை? இருபது முறை? ஐம்பது முறை தோல்வியே காணாமல் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற சாதனைக்குரியவர் ஃப்ளாய்ட் மேவெதர். இந்த அரிய சாதனையைச் சமன் செய்ய சத்தமே இல்லாமல் தயாராகி வருகின்றார் தாய்லாந்தைச் சேர்ந்த வான்ஹெங் மேனயோதின்!

இவரது இயற்பெயர் சாயபோன் மூன்ஸ்ரி. தாய்லாந்தின் மிக ஏழ்மையான பகுதியிலிருந்து வந்த இவர் தேர்ந்தெடுத்த விளையாட்டு மினிமம் வெயிட் பாக்ஸிங். 1968-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது 48 கிலோ எடைப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது மினிமம் வெயிட் பாக்ஸிங். இதில் இன்று தவிர்க்கமுடியாத போட்டியாளராக வளர்ந்திருக்கிறார் வான்ஹெங்.

47 கிலோ எடையும் 157 சென்டிமீட்டர் உயரமும் மட்டுமே கொண்ட வான்ஹெங் செல்லமாக ‘dwarf giant’ என்று அழைக்கப்படுகின்றார். தன்னுடைய 22 வயதில் முதன்முதலாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோயல் கேட்டிற்கு எதிராகக் களமிறங்கிய போட்டிமுதல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தட்சூயா ஃபுகுஹுராவிற்கு எதிராகப் போட்டியிட்ட 49 போட்டிகளிலும் வான்ஹெங்கிற்குக் கிடைத்தவை எல்லாம் வெற்றி… வெற்றி… வெற்றி! இந்த 49 போட்டிகளில் நாக்- அவுட் முறையில் வெற்றி பெற்ற போட்டிகள் மொத்தம் பதினேழு.

இதன்மூலமாக அவர் பிரபல குத்துச்சண்டை வீரர் ராக்கி மார்சியாநோவின் சாதனையைச் சமன் செய்துள்ளார். அவர் மீண்டும் கலந்துகொள்ளும் போட்டியிலும் வெற்றி பெற்றால், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதரின் சாதனையையும் முறியடித்து விடுவார். ஃப்ளாய்ட், தான் பங்கேற்ற 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றவர். இதில் அவர் நாக்-அவுட் மூலமாகப் பெற்ற வெற்றிகள் மட்டும் 27.

இவ்வளவு சாதனைகள் புரிந்த மேவேதரின் சாதனையை இந்தத் தாய்லாந்துச் சிங்கம் சமன் செய்யுமா என்று அவரிடம் கேட்டால், நிதானமாகப் பதில் வருகின்றது.

“சாதனைகள் முறியடிப்பதைக் குறித்து நான் யோசிக்கவில்லை. மற்ற விளையாட்டு வீரர்களைப் போலவே, நான் ஒவ்வொரு போட்டியிலும் போராடி வெற்றி பெறவேண்டும். தோல்வியை நான் விரும்புவதில்லை. என் உழைப்பின் மூலமாக நான் ஒய்வு பெறும்வரை வெற்றிபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்” என்கிறான் இந்த மாவீரன் நம்பிக்கையோடு!

Previous Post

சிறப்பு அதிரடி படையினரால் 1 கிலோ ஹெராயின் பறிமுதல்

Next Post

தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர்

Next Post

தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures