Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மீண்டும் சேர வாய்ப்பே இல்லை : கவுதமி

February 26, 2018
in Cinema
0

நடிகர் கமல்ஹாசனுடன் 13 ஆண்டுகளாக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தவர் நடிகை கவுதமி. 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்தார். அப்போது கமல் மீது அவர் எந்தவித புகாரும் சொல்லவில்லை. ஒத்துவரவில்லை பிரிந்து வந்து விட்டேன் என்று மட்டுமே சொன்னார். அதன்பிறகு சினிமா, சின்னத்திரையில் தொடர்ந்து பங்களித்து வருபவர், புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போதும் கமலுடன் கவுதமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரது புதிய கட்சியில் கவுதமியும் அங்கம் வகிப்பதாகவும் மீடியாக்களில் செய்தி பரவி வருகின்றன. ஆனால் அந்த செய்தியை மறுத்து தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருக்கிறார் கவுதமி.

அந்த செய்தியில், கமல்ஹாசனை விட்டு பிரிந்த பிறகு நான் அவரை சந்தித்ததில்லை. இப்போது அவர் புதிய கட்சி தொடங்கிய பிறகு நான் அவரை சந்தித்ததாகவும், அவரது கட்சியில் நான் இணையப்போவதாகவும் வெளியான செய்திகள் உண்மையில்லை என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள கவுதமி, நான் மீண்டும் கமலுடன் சேர வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.

என் மகளுக்கும், எனக்கும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கை மற்றும் நிரந்தர வருமானத்திற்கு தேவையான பணிகளை செய்து வருகிறேன். அதோடு நான் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில், தசாவதாரம், விஸ்வரூபம் படங்களுக்கு நான் பணியாற்றியதற்கான சம்பளம் பாக்கியை இன்னும் தரவில்லை. அதுகுறித்து தகவல்கள் அனுப்பியபோதும் எந்த பதிலும் இல்லை.

இதுபோன்ற வேலைகள் மூலம் தான் எனக்கு வருமானம் வருகிறது. ஆனால் எனக்கு வர வேண்டிய பணம் வராததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறேன். அதோடு நான் கமலை பிரிந்ததற்கு ஸ்ருதிஹாசனோ, அக்சராவோ காரணமல்ல. நான் எப்போதுமே வாழ்க்கையில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற நினைப்பவள். அந்த சுயமரியாதையானது சிதைந்து போகும்பட்சத்தில் அந்த வாழ்க்கையே வேதனையாகி விடும். அதன்காரணமாகவே நான் கமலை விட்டு பிரிந்து வந்தேன்.

இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.

Previous Post

அம்மா வேணும்: ஸ்ரீதேவியின் மூத்த மகள் கதறல்

Next Post

ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்கள்

Next Post

ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures