Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக அஷ்வின் நியமிக்கப்பட்டார்

February 26, 2018
in Sports
0
ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக அஷ்வின் நியமிக்கப்பட்டார்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 11வது சீசன், வரும் ஏப்., 7ல் துவங்குகிறது. சூதாட்ட தடையில் இருந்து மீண்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள், இரு ஆண்டுக்குப் பின் மீண்டும் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலத்தில், தமிழகத்தின் ‘நம்பர்–1’ வீரர், சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ரூ. 7.6 கோடிக்கு, பஞ்சாப் அணிக்கு சென்றார்.

இந்த அணிக்கு, கடந்த சீசனில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், கேப்டனாக இருந்தார். அஷ்வின் பஞ்சாப் அணிக்கு சென்றதால், கேப்டன் ஆகலாம் என, கூறப்பட்டது. தற்போது, இதற்கான அறிவிப்பு வெ ளியானது. வரும் சீசனில், பஞ்சாப் அணி கேப்டனாக அஷ்வின் செயல்படவுள்ளார். பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ஏப்.,8ல் டில்லியை எதிர்த்து விளையாட உள்ளது.

முதன் முறை

ஐ.பி.எல்., தொடரில் 2008 முதல் 2015 வரை என, 8 ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடினார் அஷ்வின். கடந்த இரு சீசனில், புதிதாக வந்த புனே அணிக்கு சென்றார். முதன் முறையாக வரும் தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார்.

Previous Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறும் மோர்னே மார்கல்

Next Post

தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான நிறைவு

Next Post

தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures