Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்திய அணி

February 4, 2018
in Sports
0

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

 

அண்மையில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியது. டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். முதல் போட்டியில் களம் கண்ட அதே வீரர்களுடன் இந்திய அணி களம் கண்டது. தென்னாப்பிரிக்கா அணியில் காயம் காரணமாக கேப்டன் டுபிளஸி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இளம் வீரர் மார்க்ரம் கேப்டனாக களமிறங்கினார்.

 

முதலில் பேட் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் கிடைத்தது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 32.2 ஓவர்களில் 118 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சஹால் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், குலதீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சஹால் எடுக்கும் முதல் 5 விக்கெட்டுகள் இதுவாகும். அதேபோல், தென்னாப்பிரிக்க அணி, தனது சொந்த மண்ணில் எடுத்த குறைவான ஸ்கோர் இதுவே.

119 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ரோகித் சர்மா 15 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த கோலி – தவான் ஜோடி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அபாரமாக ஆடிய தவான் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் குவிக்க மறுமுனையில் இருந்த கேப்டன் கோலி 46 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 20.3 ஓவர்களில் வெற்றி இலக்கை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இந்திய அணி எட்டியது. இதன்மூலம், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

Previous Post

இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

Next Post

செஞ்சூரியனில் பட்டையைக் கிளப்பிய குல்தீப் – சஹால் ஜோடி

Next Post
செஞ்சூரியனில் பட்டையைக் கிளப்பிய குல்தீப் – சஹால் ஜோடி

செஞ்சூரியனில் பட்டையைக் கிளப்பிய குல்தீப் - சஹால் ஜோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures