Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

சோயிப் மாலிக் விலகல்

January 21, 2018
in Sports
0

பாகிஸ்தான் ‘ஆல்–ரவுண்டர்’ சோயிப் மாலிக், தலையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் இருந்து விலகினார்.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 5–0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் முதல் ‘டுவென்டி–20’ போட்டி வெலிங்டனில் நாளை நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஆக்லாந்து (ஜன. 25), மவுண்ட் மவுன்கனுய் (ஜன. 28) நகரங்களில் நடக்கவுள்ளன.

‘டுவென்டி–20’ தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சீனியர் வீரர் சோயிப் மாலிக் விலகினார். சமீபத்தில் டுனிடினில் நடந்த 3வது ஒருநாள் போட்டியின் போது, நியூசிலாந்து வீரர் கோலின் முன்ரோ எறிந்த பந்து சோயிப் மாலிக்கின் தலைமையில் தாக்கியது. இதனால் இவர், அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இவருக்கு ஓய்வு தேவைப்படுவதால், ‘டுவென்டி–20’ தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்று வீரரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தேர்வுக்குழு அறிவிக்கவில்லை.

Previous Post

இளம் இங்கிலாந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி

Next Post

இந்தியா ‘உலக சாம்பியன்’: பார்வையற்றோர் கிரிக்கெட்டில்

Next Post

இந்தியா ‘உலக சாம்பியன்’: பார்வையற்றோர் கிரிக்கெட்டில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures