Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தொடரை இழந்தது இந்தியா: செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வி

January 18, 2018
in Sports
0
தொடரை இழந்தது இந்தியா: செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வி

செஞ்சூரியன் டெஸ்டிலும் இந்திய அணியின் ‘பேட்டிங்’ மடமடவென சரிந்தது. இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களுக்கு சுருண்டு, 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடரை 0–2 என இழந்தது. தென் ஆப்ரிக்க தரப்பில் ‘வேகத்தில்’ மிரட்டிய லுங்கி நிகிடி, 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா, 0–1 என, தொடரில் பின் தங்கி இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட், செஞ்சூரியனில் நடந்தது.

இதில் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில், இந்தியா களமிறங்கியது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 335, இந்தியா 307 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 258 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (11), பார்த்திவ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

புஜாரா ஏமாற்றம்: ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், பிலாண்டர் பந்தில் பவுண்டரி அடித்த புஜாரா, உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை மீட்பார் என நம்பப்பட்டது. ஆனால், 19 ரன் எடுத்த இவர், தேவையில்லாமல் ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் பார்த்திவ் படேலும் (19) அவுட்டானார்.

பாண்ட்யா சொதப்பல்: பின் ரோகித் சர்மாவுடன் இணைந்தார் பாண்ட்யா. நிகிடி வீசிய பவுன்சரை, பாய்ந்து அடித்த இவரை, ஒற்றை கையினால் ‘கேட்ச்’ செய்து பெவிலியனுக்கு அனுப்பினார் விக்கெட் கீப்பர் குயின்டன். சற்று தாக்குப் பிடிப்பார் என்று நம்பப்பட்ட நம்ம ஊரு அஷ்வின் (3), அடுத்த சில நிமிடத்தில் கிளம்ப, இந்திய அணி 87 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

ரோகித் போராட்டம்: பின் வரிசையில் வந்த ‘டெயிலெண்டர்’ முகமது ஷமி, ரோகித்துக்கு கைகொடுத்தனர். மகராஜ் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார் ரோகித். மறுபுறம் மகராஜ், நிகிடி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் ஷமி. அடுத்து ரபாடா ஓவரில் இரு பவுண்டரி அடித்த ரோகித் சர்மா (47), இவரது பவுன்சரிலேயே அவுட்டாக, செஞ்சூரியனில் இந்தியாவின் தோல்வி காயத்திற்கு(இஞ்சூரி) மருந்து போட ஆளில்லாமல் போனது.

தொடர்ந்து மிரட்டிய நிகிடி, இம்முறை ஷமி(28), பும்ராவை (2) வெளியேற்றினார். முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக நிகிடி 6 விக்கெட் வீழ்த்தினார்.

இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் வரும் 24ல் ஜோகன்ஸ்பர்க்கில் துவங்குகிறது.

Previous Post

அமெரிக்காவின் அடுத்த பேரிடி…!

Next Post

வருகிறார்கள் வாரிசுகள்..

Next Post
வருகிறார்கள் வாரிசுகள்..

வருகிறார்கள் வாரிசுகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures