Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் இணைந்த தனுஷ் – யுவன் கூட்டணி

December 26, 2017
in Cinema
0
மீண்டும் இணைந்த தனுஷ் – யுவன் கூட்டணி

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி இணைந்த படங்களான ‘துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி’ ஆகிய படங்களின் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் யுவன், தனுஷ், நா. முத்துக்குமார் கூட்டணி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

‘யாரடி நீ மோகினி’ படங்களுக்குப் பிறகு சுமார் 10 வருடங்களாக தனுஷ், யுவன் இருவரும் இணைந்து ஒரு படம் கூட செய்யவில்லை. அந்தக் கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதன் பின் தனுஷ், அனிருத்துடன் இணைந்து பயணித்தார். கடந்த சில படங்களாக அவரையும் பிரிந்து ஷான் ரோல்டன்-ஐ அவர் படங்களுக்கு இசையமைக்க வைத்தார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் மீண்டும் அனிருத் இசையமைப்பாரா என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால், தனுஷ் மீண்டும் யுவனுடன் சேர உள்ளார் என்று தகவல் வெளியானது. நேற்று அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன் கூட்டணி இணைந்துள்ளது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

‘பாகுபலி 2’ – சீனா வெளியீடு கைவிடப்பட்டது?

Next Post

வரலட்சுமி மூலம் பார்வதிக்கு பதில் சொன்ன மம்முட்டி..!

Next Post

வரலட்சுமி மூலம் பார்வதிக்கு பதில் சொன்ன மம்முட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures