நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டு பெற்ற படம் அறம். கோபி நயினார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஒரு சிக்கல் உருவாகி உள்ளது.
அறம் படம், என்னுடைய பரிவாரா என்ற படத்தின் கதை. அதை திருடி படமாக்கிவிட்டனர், இதற்கு இழப்பீடாக ரூ.2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பாளர் மனோஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஏற்கனவே மெட்ராஸ், கத்தி ஆகிய படங்கள் தனது கதைகள் என புகார் கூறியவர் கோபி. இப்போது அவரது படத்திற்கே, அது போன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது.