சமீபகாலமாக கமல்ஹாசன் எப்படி டுவிட்டரில் கருத்துக்கள் வெளியிட்டு வருகிறாரோ, அதேபோன்று நடிகை கஸ்தூரியும் அவ்வப்போது ஏதேனும் கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, காலா படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினி அரசியல் குறித்து ரசிகர்களிடம் பேசியபோது, அவரை கிண்டல் செய்யும் விதத்தில் கருத்து பதிவிட்டார்.
அதையடுத்து ரஜினி ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு பிறகு ரஜினியை நேரில் சந்தித்து அந்த சர்ச்சையில் இருந்து தப்பினார் கஸ்தூரி. அதையடுத்தும் தொடர்ந்து டுவிட்டரில் அரசியல் பிரபலங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி, தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள விஜய்யின் மெர்சல் படம் குறித்தும் தற்போது ஒரு கருத்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கமல் எட்டடி பாஞ்சா விஜய் நாற்பத்து எட்டடி, அற்புதமான மெர்சல் டீம் என்று பதிவிட்டுள்ளார்.
மெர்சல் படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி போன்றவற்றை விஜய் விமர்சித்திருக்கிறார். அதை தான் கஸ்தூரி இப்படி சுட்டிக்காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.