Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மக்களை சிரிக்க வைப்பது கஷ்டம் : அஜய் தேவ்கன்

October 17, 2017
in Cinema
0
மக்களை சிரிக்க வைப்பது கஷ்டம் : அஜய் தேவ்கன்

கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக, இந்த தீபாவளிக்கு காமெடி சரவெடியாக வெடிக்க களமிறங்குகிறது “கோல்மால் அகைன்”. ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜ்ய் தேவ்கன், பரிணிதி சோப்ரா, தபு, அர்சத் வர்ஷி, துஸார் கபூர், ஸ்ரேயாஸ் தல்படே, குணால் கேமு, பிரகாஷ் ராஜ், நீல் நிதின் முகேஷ், சஞ்சய் மிஸ்ரா என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருக்கும், கோல்மால் அகைன் படத்தின் அனுபவம் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார் அஜய் தேவ்கன்…

பாலிவுட்டில் நான்கு பாகங்களில் நடித்த ஒரே நடிகர் நீங்கள் தான், அந்த அனுபவம் பற்றி?
இதற்கு காரணம் நான் அல்ல, இந்த புகழ் அனைத்தும் கோல்மால் படங்களின் வரிசைக்கு தான். அந்த படங்களில் வருகின்றன ஒவ்வொரு கேரக்டரும் ஒரு வகையில் மிகவும் பிரபலமானவர்கள் தான். ஜானி லீவர், சஞ்சய் மிஸ்ரா போன்றவர்களின் கேரக்டர் மிகவும் பிரபலமானது. இந்த படம் நான்கு பாகங்கள் வரும் அளவுக்கு பிரபலமாக இருக்கிறது என்றால் முக்கிய காரணமே ரசிகர்கள் தான். அவர்கள் விரும்புவதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. மேலும் படக்குழும் அதற்கு அதிகப்படியாக உழைத்துள்ளார்கள்.

மல்டி ஸ்டார் படத்தில் நீங்கள் சந்தித்த பிரச்னை என்ன?
ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போது நான், என் ரோலை நன்கு அறிந்து தான் நடிப்பேன். எந்த நடிகருடனும் எனக்கு பிரச்னை ஏற்பட்டது இல்லை. நான்கு பாகங்களில் நடித்துவிட்டதால் இந்தப்படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக தான் இருந்தோம். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. மேலும் படம் முழுக்க ஒரே சிரிப்பு, கொண்டாட்டமாக தான் இருந்தது.

கரீனா கபூர் நடிக்காதது பற்றி?
கதைக்கு அவர் தேவைப்படவில்லை. கரீனாவிற்கு பதில் பரிணிதி சோப்ரா தான் இந்த ரோலுக்கு பொருத்தமாக இருந்தார். கரீனா மிகச்சிறந்த நடிகை, அவரை நாங்கள் எல்லோருமே மிஸ் செய்தோம். அநேகமாக கோல்மால் 5 அவர் நடிப்பார் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து உங்களது படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாவது பற்றி?
அப்படியில்லை, எந்த நடிகரும் தங்களது படங்களை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம். எனது படம் அப்போது ரிலீஸ் செய்தால் தான் பொருத்தமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக, கோல்மால் படம் இருக்கும். ஆகையால் தான் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம்.

ஆக்ஷ்னிலிருந்து எப்போது காமெடியாக நடிக்க தொடங்கினீர்கள்?
பொதுவாக ஒரு நடிகன் என்றால் எந்த மாதிரியான ரோலிலும் நடிக்க வேண்டும். இஷ்க் படத்தை முடித்தபிறகு என்னாலும் காமெடி படத்தில் நடிக்க முடியும் என்ற எண்ணம் வந்தது. அதன்பின்னர் ரொமான்ட்டிக் காமெடி படமான பியார் டு ஹோனா ஹி ஹே படத்திற்கு பிறகு தான், கோல்மால் போன்ற காமெடி படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் காமெடியை சரியாக செய்கிறேனா, இல்லையா என்று தெரியாது. ஆனால் மக்களை சிரிக்க வைப்பது என்பது கஷ்டமான ஒன்று என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

உங்களின் பாத்சாகோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லாதது பற்றி?
பாத்சாகோ படம் வசூல் இல்லை என்கிறீர்களா… என்னை பொறுத்தமட்டில் பட்ஜெட்டிற்கு அதிகப்படியான வசூலை படம் கொடுத்துள்ளது. மக்கள் படத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார்களா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் படம் நல்ல வசூலை தந்துள்ளது, அது மகிழ்ச்சியளிக்கிறது.

Previous Post

கதாசிரியர்களும், இயக்குநர்களும் தான் உண்மையான ஹீரோக்கள் : அமீர்கான்

Next Post

தானா சேர்ந்த கூட்டத்தில் ஜிமிக்கி கம்மல் ஷெரில்

Next Post
தானா சேர்ந்த கூட்டத்தில் ஜிமிக்கி கம்மல் ஷெரில்

தானா சேர்ந்த கூட்டத்தில் ஜிமிக்கி கம்மல் ஷெரில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026
பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

June 5, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

June 5, 2026

Recent News

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026
பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

June 5, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

June 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures