Monday, May 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

59 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையான வளர்மதி

September 7, 2017
in World
0
59 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையான வளர்மதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி ஹைகோர்ட் உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சிறை வாசலில் அவருக்கு தாரை தப்பட்டையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த வளர்மதி பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்காக, போராட்டம் நடத்திவருபவர்களுக்கு ஆதரவாகப் போராடி வருபவர். இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும்போது மாணவர்கள் பிரச்னைக்காக போராடி வளர்மதி சிறைசென்றுள்ளார். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கக்கூடாது என்பதற்காக போராட்டம் நடைபெற்றபோது, அனைவருக்கும் துண்டறிக்கை பிரச்சாரம் செய்தார். அதனால் குளித்தலையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவரை நிர்வாணப்படுத்தி காவல்துறையினர் பரிசோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியதாக, விடுதலையானதும் தெரிவித்தார். சிறைத்துறையினரின் இந்தச்செயல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குண்டர் சட்டம் இந்நிலையில் கடந்த ஜீலை மாதம் சேலம் அருகே கல்லூரி முன்பு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை மூலம் பிரசாரம் செய்துவந்தார். அப்போது மாணவர்களிடையே கிளர்ச்சி ஏற்படுத்துவதாகக் கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார். ஆனால் 3 நாட்களுக்குப் பிறகு அவர் மீது குண்டர் சட்டம் பாய்வதாக சேலம் காவல்துறை ஆணையர் அறிவித்தார். காவல்துறை, அரசின் இந்த முடிவை அனைவருமே கடுமையாக விமர்சித்தனர்.

ரத்து செய்த ஹைகோர்ட் இந்நிலையில் வளர்மதியின் தந்தை மாதையன் அனுமதி பெற்று அமைதியான வழியில் போராடிய தன் மகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வள்ரமதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

தாரை தப்பட்டையுடன் வரவேற்பு இதனையடுத்து வளர்மதி இன்று கோவை மத்திய சிறையில் இருந்து 59 நாட்களுக்குப் பிறகு வெளிவந்தார். சிறையில் இருந்து புன்னகைத்தபடியே வந்த வளர்மதிக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர்.

சிறை வாசலிலேயே முழங்கிய வளர்மதி சிறையில் அடைபட்டிருந்தாலும் சினம் குறையவில்லை என்பது போல வெளியே வந்த வளர்மதி சிறை வாசலிலேயே தம்மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து கோஷமிட்டார். மக்களுக்காக போராடினால் குண்டர் சட்டமா, தீவிரவாதி பட்டமா என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.

நீட் தேர்வை எதிர்ப்போம் அரசின் அடக்குமுறையையும், காவல்துறையின் பொய்வழக்கையும் உடைத்தெறிவோம். ஹைட்ரோகார்பன் திட்டம், நீட் தகுதித் தேர்வை கண்டிப்போம். நீட் தகுதித் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம், அனிதாவின் மரணம் தற்கொலையல்ல படுகொலை என்றும் வளர்மதி முழங்கினார்.

Previous Post

மாணவர்கள் உண்மை நிலையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும்.

Next Post

மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” “இது காலம்”

Next Post
Easy24News

மனசுக்குள் ஒரு மழைச்சாரல்" "இது காலம்"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025

Recent News

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures