Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

பிரபல இந்திய வீரர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்!!

August 7, 2017
in Sports
0

இந்திய வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர் என பெயர் பெற்றவர்.

கடந்த 2013ல் நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணையில் நிரூபணம் ஆனது.

இதனையடுத்து ஸ்ரீசாந்த் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.

இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்ரீசாந்துக்கு விதித்த தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் பிசிசிஐ தடையை நீக்கவில்லை.

இதே போல, தடையை நீக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது, அதன் தீர்ப்பு இன்று வந்துள்ளது.

ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை உத்தரவு நீக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், பிசிசிஐ தன்னாட்சி அமைப்பாக உள்ளதால் அதனிடம் தடைநீக்கச் சான்று பெற்றால் மட்டுமே ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

டுவிட்டரில் டோனியை கிண்டல் செய்த மஹேல ஜெயவர்தனே

Next Post

வீராட் கோஹ்லி – தி கிரேட் காளி பேச்சு!!

Next Post
வீராட் கோஹ்லி –  தி கிரேட் காளி பேச்சு!!

வீராட் கோஹ்லி - தி கிரேட் காளி பேச்சு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures