Monday, August 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

இறுதி ஆட்டத்தில் சிலிச்சுடன் இன்று மோதல்: சாதனை படைப்பாரா ரோஜர் பெடரர்?

July 16, 2017
in Sports
0
இறுதி ஆட்டத்தில் சிலிச்சுடன் இன்று மோதல்: சாதனை படைப்பாரா ரோஜர் பெடரர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், மரியன் சிலிச்சை எதிர்த்து ஆடவுள்ளார். இப்போட்டியில் வெற்றிபெற்றால், மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை ரோஜர் பெடரர் படைப்பார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், லண்டனில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இன்று சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர், குரோஷியாவின் மரியன் சிலிச்சுடன் மோதுகிறார். இப்போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றால், விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறை வென்ற வீரர் என்ற சாதனையையும், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 19 முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைப்பார். மேலும் 36 வயதை நெருங்கும் ரோஜர் பெடரர், விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றால், மிக அதிக வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைப்பார். இதற்கு முன்னர் அமெரிக்க டென்னிஸ் வீரரான அர்தர் ஆஷ், 32 வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றதே சாதனையாக இருந்துள்ளது.

30 ஆட்டங்களில் வெற்றி
கடந்த ஆண்டு காயம் காரணமாக டென்னிஸ் போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் இருந்த பெடரர், இந்த ஆண்டில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த ஜனவரி மாதம், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற அவர், அதைத்தொடர்ந்து சிறிய அளவிலான போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளார். இந்த ஆண்டு அவர் ஆடிய 32 ஆட்டங்களில் 30-ல் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விம்பிள்டன் போட்டியில் இதுவரை ஒரு செட்டைக்கூட இழக்காமல் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதே வேகத்தில் அவர் இறுதிப் போட்டியிலும் வென்று சாதனை படைப்பார் என்று டென்னிஸ் ரசிகர்கள் நம்புகின்றனர்.

விம்பிள்டனில் தான் மோதவுள்ள 11-வது இறுதிப் போட்டி குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ள ரோஜர் பெடரர், “கடந்த ஆண்டில் காயத்தால் அவதிப்பட்டு சரியாக ஆடமுடியாமல் கஷ்டப்பட்டேன். இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது எனக்கே ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. கடந்த சில மாதங்கள் எனக்கு கனவுப் பயணமாக அமைந்தது. விம்பிள்டன் போட்டியை நான் மிகவும் விரும்புகிறேன். இதில் சாதனை படைப்பது மிகப்பெரிய விஷயம். அப்படி சாதனை படைக்க முடிந்தால் அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

ரோஜர் பெடரர், இதுவரை மரியன் சிலிச்சுக்கு எதிராக 7 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளார். இதுபற்றி கூறும் பெடரர், “சிலிச்சுக்கு எதிராக அதிக போட்டிகளில் வென்றுள்ளது எனக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. இருப்பினும் இறுதிப் போட்டியில் அவரை அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. கடுமையாக போராடவேண்டி இருக்கும்” என்றார். ரோஜர் பெடரருக்கு எதிராக இன்றைய போட்டியில் மோதும் மரியன் சிலிச்சுக்கு விம்பிள்டனில் இது முதலாவது இறுதி ஆட்டமாகும். கோரான் இவானிசெவிக்குக்கு பிறகு விம்பிள்டன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் 2-வது குரோஷிய வீரர் என்ற பேருமையுடன் அவர் களம் இறங்குகிறார். இந்த விம்பிள்டனில் இதுவரை எதிராளிகள் தொட முடியாதவாறு சர்வீசில் 130 ஏஸ்களை பறக்கவிட்டது அவரது சாதனையாக உள்ளது.

இன்றைய இறுதி ஆட்டம் குறித்து கூறியுள்ள சிலிச், “இது ரோஜர் பெடரரின் சொந்த மைதானத்தைப் போன்றது என்பதை நான் நன்கு அறிவேன். இந்த மைதானம் அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட மைதானம். இங்கு அவரை வெற்றிகொள்வது என்பது ஒரு மலையில் ஏறுவதைப் போன்று கடினமானது என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் கடுமையாக போராடி அவரை வெற்றிகொள்ள முயல்வேன்” என்றார். – ஏஎப்பி

Previous Post

‘இந்தத் தங்கம் கிடைக்காவிடில் பைத்தியம் ஆகியிருப்பேன்’ – பாரா அத்லெடிக் சாம்பியன் சுந்தர் உருக்கம்!

Next Post

இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு: முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணிப்பு

Next Post
இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு: முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணிப்பு

இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு: முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

August 4, 2025
“எந்த வேலையும் இன்றி இலங்கையில் அரச சேவையில் இருக்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள்”

அரச ஊழியர்கள் மீது பாயப்போகும் சட்டம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

August 4, 2025
நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

August 4, 2025
நடிகர் மதன் பாப் காலமானார்

நடிகர் மதன் பாப் காலமானார்

August 3, 2025

Recent News

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

August 4, 2025
“எந்த வேலையும் இன்றி இலங்கையில் அரச சேவையில் இருக்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள்”

அரச ஊழியர்கள் மீது பாயப்போகும் சட்டம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

August 4, 2025
நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

August 4, 2025
நடிகர் மதன் பாப் காலமானார்

நடிகர் மதன் பாப் காலமானார்

August 3, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures