சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா. தமிழை விட தெலுங்கில் தான் முன்னணி நடிகர்களின் ஜோடியாக சில பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் சமந்தா நடித்துள்ள ‘ஜானு’ படம் நாளை(பிப்., 10) வெளியாக உள்ளது. அதற்கான பிரமோஷன்களில் அவர் பரபரப்பாக உள்ளார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில் தனது எதிர்காலம் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
“எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது, எனது குடும்பத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டும். ஒரு நாயகியின் திரையுலக வாழ்க்கை என்பது குறுகிய காலம் மட்டுமே. அதனால், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை நடிப்பேன். ஆனால், அதுவரையிலும் நான் நடிக்கும் படங்கள் காலத்திற்கும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய படங்களாக இருக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

