Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Politics

விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளை வேட்டையாட சதி: ஜனநாயக போராளிகள்

July 27, 2017
in Politics
0

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு முன்னாள் போராளிகள் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். என்றால், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் நாடு கடத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு தம்மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் சமூகத்தில் இணைத்த முன்னாள் போராளிகளை மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் என்ற முன்னாள் போராளிகளின் கட்சி ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்  புனர்வாழ்வு பெற்ற விடுதலையான முன்னாள் போராளியான யாழ் பல்கலைக்கழகத்தின் நுன்கலைப்பீட விரிவுரையாளரான கண்ணதாஸிற்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பு தொடர்பிலும் அண்மைக்காலமாக வடக்கில் தொடரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் ன்னாள் போராளிகளை இணைத்து தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் தெளிவுபடுத்தும் முகமாக இன்று கிளிநொச்சியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜனநாயகப் போராளிகள் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் மாத்திரமன்றி கடந்த சனிக்கிழமை யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடனும் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்துவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

முன்னாள் போராளிகள் மீது திட்டமிட்டு பழிகளை சுமத்தி அவர்களை வேட்டையாடுவதுதான் தமது திட்டம் என்றால் முன்னாள் போராளிகளை நடாடு கடத்துமாறும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டு செயற்படுவதில்லை என்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.

Previous Post

சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை!

Next Post

மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

Next Post
மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures