Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வர் மீண்டும் நீதிமன்றுக்கு!

July 26, 2021
in Sri Lanka News
0
ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வர் மீண்டும் நீதிமன்றுக்கு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று(26) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

சந்தேகநபர்கள், நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் கிருலப்பனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதுடன், அவரின் தந்தை, மற்றும் தரகர் ஆகியோரிடம் பொரளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

அத்துடன், 22 வயதான மற்றுமொரு யுவதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேநேரம், குறித்த சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பிலும் இன்று நீதிமன்றில் சமர்ப்பணம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் 36 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு தெற்கு குற்றவியல் பிரிவு, கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு மற்றும் பொரளை காவல்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து, நிபுணத்துவம் மிக்க பல ஆண்டுகளாக அனுபவமுள்ள அதிகாரிகளினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில், காவல்துறை ஊடகப் பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சிறுமி தங்கியிருந்த அறையில், எரிந்த பாகங்கள் மீட்கப்பட்டதுடன், அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்காக, அரச இரசாயன பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் மழை!

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures