சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள படம் லட்சுமியின் என்டிஆர். மறைந்த நடிகரும், ஆந்திர முதல்வருமான என்டிஆரின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதியை மையப்படுத்திய கதையில் இந்தப்படம் உருவாகியிருக்கிறது.
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வில்லனாக சித்தரித்து இருந்தனர். இதனால் அரசியல் வட்டாரத்திலும் இப்படம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தணிக்கைக்கு இப்படம் அனுப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள், பல அரசியல் சர்ச்சைகள் படத்தில் இருப்பதாக சொல்லி தணிக்கை சான்றிதழ் கொடுக்க மறுத்து வந்தனர். அதையடுத்து பல காட்சிகள் கத்தரிக்கப்பட்ட பிறகு புதன்கிழமையான நாளை லட்சுமியின் என்டிஆர் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதாக தணிக்கைக்குழு கூறியுள்ளது.
லட்சுமியின் என்டிஆர் படத்தை, மார்ச் 22-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்த ராம்கோபால் வர்மா, இப்போது மார்ச் 29-ந்தேதிக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்.