தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். ரஜினி இமயமலையில் இருந்து திரும்பியதும் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் அதற்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்து விட திட்டமிட்டுள்ளார்.
அதனால் தான் தர்பாருக்கு பிறகு இடைவெளி கொடுக்காமல் உடனடியாக அடுத்த படத்தை தொடங்குகிறார் ரஜினி. மேலும், கிராமத்து செண்டிமென்ட் கதையில் இந்த படம் உருவாகும் நிலையில், சந்திரமுகிக்குப் பிறகு ஜோதிகா இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரைத் தொடர்ந்து கீர்த்தி சுரேசும் இன்னொரு நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

