யாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் பகுதியில் அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
அரியாலை நெடுங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.