Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

மூளையில் ஏற்படும் இடையூறுகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன பரிசோதனை

June 5, 2022
in Health, Sri Lanka News
0
மூளையில் ஏற்படும் இடையூறுகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன பரிசோதனை

பாடசாலையில் இறைவணக்க வேளையில் மாணவ மாணவிகள் வரிசையில் நின்று பிரார்த்தனை பாடல்களை பாடும்போது, சில தருணங்களில் மாணவ மாணவிகளில் யாரேனும் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து விடுவர். சிலர் உடனடியாக ஆழ்மயக்க நிலைக்கு சென்று விடுவர்.

ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிப்பர். இதன்போது பாதிக்கப்பட்ட மாணவருக்கு எம்மாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அவதானிக்க மருத்துவர்கள் இ இ ஜி எனப்படும் எலக்ட்ரோ என்செபலோகிராபி என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்.

எம்மில் பலருக்கும் இதயம் தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு இருந்தால் ஈ சி ஜி எனப்படும் பரிசோதனையை செய்திருப்போம்.

அது தொடர்பான விழிப்புணர்வும் இருக்கும். ஆனால் மருத்துவர்கள் இ இ ஜி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றவுடன் முதலில் தயக்கம் காட்டுவர்.

இந்த பரிசோதனை, மூளையின் செயல்பாடுகளையும், மூளையின் மேற்பகுதியில் உள்ள நியுரான் எனப்படும் செல்களுக்கு இடையேயான மின்னாற்றல் திறன் குறித்தும் மேற்கொள்ளப்படுகிறது.

சிலருக்கு பாதிப்பின் தன்மையை தெரிந்து கொள்வதற்காகவும், எம்மாதிரியான சிகிச்சையை வழங்குவது குறித்தும் இத்தகைய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சிலருக்கு பாதிப்பின் தன்மையை பொறுத்து, ஒரு வார காலத்திற்கும் மேலாக இத்தகைய பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்வர்.

சிலருக்கு கார்டியோஜெனிக் சிங்கோப் ( Cardiogenic Syncope ) என்ற பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்பதனை கண்டறியவும் இத்தகைய இ இ ஜி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்க, மருத்துவர்கள் வைத்தியசாலைகளில் ஹால்டர் மானிட்டரிங் எனும் பரிசோதனையை மேற்கொள்வதைப் போன்று, மூளையின் செயல்பாட்டை துல்லியமாக அவதானிக்க இந்த இ. இ. ஜி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகைய பரிசோதனைகளின் மூலம் மூளையில் ஏற்படும் கட்டிகள், காயங்கள், மூளையின் செயலிழப்புக்கான காரணங்கள், உறக்கமின்மை பாதிப்பு, மூளை அழற்சி, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை கண்டறியலாம். அதனைத் தொடர்ந்து முறையான சிகிச்சை அளித்து, அவர்களை பாதிப்பிலிருந்து மீள்வதற்குரிய முழுமையான நிவாரணத்தை அளிக்கலாம்.

டொக்டர் கோடீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

Previous Post

நடிகர் நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ முன்னோட்ட வெளியீடு

Next Post

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மோட்டார் சைக்கிள்

Next Post
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மோட்டார் சைக்கிள்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மோட்டார் சைக்கிள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures